17.06.2012 அன்று அகில இலங்கை ரீதியாக கிறிஸ்தவ விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட தமிழ் பிரிவுக்கான கத்தோலிக்க கலை, இலக்கியப் போட்டியின், பேச்சுப் போட்டியில் பிரிவு 111 இல், 2 ம் இடத்தை மண்டைதீவைச் சேர்ந்த செல்வி. சகாயசீலன் எமறன்சியா பெற்றுக்கொண்டார்.
அகில இலங்கை ரீதியாக 2013ம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று, யாழ் புனித ஜோண் போஸ்கோ வித்தியாலயத்திலிருந்து பங்குபற்றிய மாணவர்களில் முதல் இடத்தையும், இலங்கை பூராகவும் பங்குபற்றிய தமிழ் மாணவர்களில் நான்காம் இடத்தினையும் தனதாக்கிக் கொண்டவருமான செல்வன் அன்ரன் பேர்ணடின் எரிக்
அகில இலங்கை ரீதியாக 2013 இல் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள்.
யா/மண்டைதீவு றோ.க.வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழாவும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் -2013
அகில இலங்கை ரீதியாக 2014இல் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள். யோ.மேரிடிலக்சனா-162 க.டினோஷா-157 இ.றாஜ்குமார்-155 யோ.தினோஜ்-154 நி.தனுசியா-153
2016 ஆம் ஆண்டிற்கான குரு பிரதிபா பிரபா விருதினை மண்டைதீவு றோ.கத்தோலிக்க ஆசிரியை திருமதி கபிலராணி வசீகரன் அவர்கள் இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தேசத்தின் சிறார்களை எதிர்காலச் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தேவையான நிபுணத்துவம் மிக்க பரிபூரண நற்பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க ஆசிரியர்கள் மேற்கொண்ட சேவையினைக் கௌரவிக்கும் வகையில் வருடாவருடம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதினை திருமதி கபிலராணி வசீகரன் அவர்கள் 05.10.2016 அன்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் பணி மென்மேலும் சிறக்கவும், இது போன்ற பல உயர்ந்த விருதுகளைப் பெறவும் எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் அருள்வேண்டி மனமார பாராட்டி வாழ்த்துகின்றோம் We wish Mrs Kapilarani Vaseekaran Hearty Congratulations and all the best for the Guru Piratheepa Pirapa award.