During this lent season you may think of sacrificing many things such us food, leisure time, games, television or other excess habits and comforts. These things are easy to say but can be very hard to follow. Jesus died on the cross because of the great love he had for us and by sacrificing certain activities one is able to connect to Jesus' suffering. Even if you are a child sacrifice what you can.
Fasting and Abstinence
Those who are physically capable are called to abstain from eating meat on Ash Wednesday and on all Fridays during Lent. Fasting consists of one full meatless meal and other limited meatless meals as required to maintain strength. The young, the elderly and those with health concerns are not required to fast. This sacrificial fasting and abstinence should be done with the goal of spiritual development and conversion.
1 ஆம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம்.
எல் : ஏனென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.
சிந்தனை: யூதர்களின் பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை. பாவ சந்தர்ப்பங்களைத் தேடித் போவதில் நானும் பிடிவாதக்காரனாக இருக்கின்றேனா? (மௌனம் )
செபம்: மாசற்ற இயேசுவே இந்த அநியாயத் தீர்ப்பை உமக்கு அளித்து என் பாவங்களையும் பாவப் பிடிவாதத்தையும் நினைத்து மனங்கலங்கி மனஸ்தாபப்படுகிறேன். ஒவ்வொரு தடவையும் நான் பாவத்திற்கு இடங் கொடுத்தபோது உம்மை மரணத்திற்குக் கையளித்தேனாகையால் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.
முதல்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயவாயிரும்
முதல்: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவது
எல் : ஆமென்.
1ம் நிலை இறுதியில்
எங்கே சுமந்து போறீர் - சிலுவையை
நீர் எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே அங்கம் நடுநடுங்க எங்கே போறீர்
மனித பாவத்தாலே மரணத் தீர்வை பெற்று -
தூய செம்மறி போலே துக்கத்துடன் வருந்தி எங்கே போறீர்.
சிலுவைப்பாதை
2 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே.....
எல் : ஏனென்றால்.....
இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்துகிறார்கள்
சிந்தனை: இதோ என் ஆண்டவர் தோளின் மேல் இருப்பவை என் பாவங்கள். எனக்கு வரும் கஸ்தி பொல்லாப்புகளை சிலுவையின் பாகமாக ஏற்றுக்கொள்கிறேனா? (மௌனம்)
செபம் : திவ்விய இயேசுவே! எங்கள் பாவங்களுக்காக அவமான சிலுவையை இதோ நீர் சுமக்கலானீர். எங்களுக்கு வரும் துன்பங்களை உமது சிலுவையின் பாகமாக எண்ணி நாங்களும் ஏற்றுக்கொள்ள அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
2ம் நிலை இறுதியில்
பாரச் சிலுவை மரம் பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அணைத்து
பாரத்துடன் நடந்து
எங்கே போறீர்?
3ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே.....
எல் : ஏனென்றால்.....
இயேசு சிலுவையின் பாரத்தால் கீழே விழுகிறார்.
சிந்தனை: கற்றூணருகே பட்ட அடிகளும் முள்முடி அளித்த வேதனைகளும் தளர்ச்சியை அதிகரித்த போதிலும், உடனே திடங்கொண்டு எழுகிறார் என் இரட்சகர். நான் இன்னும் சாவான பாவ அந்தஸ்த்தில் விழுந்து கிடக்கின்றேனா? (மௌனம்)
செபம் : அன்பான இயேசுவே! தளர்ச்சியுள்ள எங்கள் எலும்புகளுக்கு திடனைத் தாரும். எப்பொழுதும் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்ற ஆசையை எமக்குத் தாரும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
3 ம் நிலை இறுதியில்
கல்வாரி மலை நாடி தள்ளாடித் தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை தனிமையாய் சுமந்து எங்கே போறீர்.
4 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே.....
எல் : ஏனென்றால்.....
இயேசு தம் பரிசுத்த தாயைச் சந்திக்கிறார்.
சிந்தனை: பாடுபடும் கிறிஸ்துவைத் தேடிச் சென்ற மரியாள் பாவியான கிறிஸ்துவை மறந்து விடுவாளா? என் ஆன்ம சீவியத்திற்கு உறுதுணையாக மரியாளைத் தேடுகிறேனா? (மௌனம்)
செபம் : எங்கள் இனிய இயேசுவே! இனிய திருப்பாடுகளில் பங்கெடுத்த திருத்தாயாரை எங்களுக்கும் தாயாக அளித்தீரே. அவளை அலட்சியம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தேவரீர் மட்டும் உமது திருமாதா அனுபவித்த வியாகுலத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
4 ம் நிலை இறுதியில்
மாமரி கன்னி அன்னை மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த எங்கே போறீர்.
5ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே.....
எல் : ஏனென்றால்.....
இயேசு தம் சிலுவையைச் சுமப்பதற்கு சீரேனான சீமோன் உதவி செய்கிறார்.
சிந்தனை: சீமோனைப் பலவந்தமாக அழைத்ததுபோல் என்னையும் ஆண்டவரின் அருள் பலவந்தமாய் இழுக்கிறது. ஆண்டவருக்காக என் வாழ்வை அர்ப்பணம் செய்தால் என்ன? (மௌனம்)
செபம் : இரக்கம் மிகுந்த இயேசுவே, உமது மீட்பின் சின்னமாகிய சிலுவையின் ஒரு சிறு பாகத்தை சீமோன் சுமக்க அனுமதித்தீரே. உமது பரிசுத்த மீட்பை மனிதருக்கு எடுத்துரைக்க ஆன்ம ஆவலையும் சேவை மனத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
5 ம் நிலை இறுதியில்
உதிரமாராய்ச் சிந்த உள்ள வீரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழி நடந்து
எங்கே போறீர்.
6 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே.....
எல் : ஏனென்றால்.....
இரத்தக்கறை பிடித்த இயேசுவின் திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறாள்
சிந்தனை: சொல்லொண்ணா வேதனை அனுபவிக்கும் நேரத்திலும் தன்னைத் தேற்ற வெரோணிக்கம்மாளின் துணியில் தன் மகிமையின் சாயல் பதியச் செய்கிரார் ஆண்டவர். என் துன்ப நேரத்திலும் இம்மகிமையின் மன்னரைத் தேடித் போகிறேனா? (மௌனம்)
செபம் : மகிமையின் அரசரான இயேசுவே! வெரோணிக்கம்மாளுக்குச் செய்தது போல, சொந்த பாவங்களுக்காக அழும் எங்கள் இருதயங்களிலும் உமது மகிமை, சாந்தி, அன்பு, ஆறுதல் ஆகிய முத்திரைகள் பதியச் செய்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
6 ம் நிலை இறுதியில்
கர்த்தனே உன் வதனம் இரத்தகறையால் மங்கி
உத்தமி வெரோணிக்கா வெண்துகிலால் துடைத்தும்
எங்கே போறீர்.
7 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசு சிலுவைப் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்
சிந்தனை: நமக்காக விழுந்து எழும்புகிறார் ஆண்டவர். நான் எந்தப் பாவத்திலும் மீண்டும் விழாமலிருக்க முயற்சி எடுக்கிறேனா? பாவ சந்தர்ப்பங்களை விலக்குகிறேனா? (மௌனம்)
செபம் : எங்கள் பலமான இயேசுவே! பாவத்தில் அமிழ்ந்து, பாதாள நரகம் நோக்கி நிற்கும் எங்களைப் பாரும். பலவீனர்களாகிய நாங்கள் ஒரு போதும் பாவத்தோடு சாகாமலிருக்க எங்களுக்கு எப்போதும் மனஸ்தாபத்தையும் ஞான உற்சாகத்தையும் கட்டளையிட்டருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
7 ம் நிலை இறுதியில்
பாவங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்தும் எங்கே போறீர்?
8 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசு பெண்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்
சிந்தனை: கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றி தியானித்துவிட்டு, நான் மனந் திரும்பாமல் முன் போலவே சீவிக்கலாமா? (மௌனம்)
செபம் : பரிவும் பாசமும் நிறைந்த இயேசுவே! பாசாங்கு நிறைந்த எங்கள் பக்தியை நினைத்து நாங்கள் வெட்கப்படுகிறோம். ஜெருசலேம் பெண்களுக்கு நீர் உரைத்ததைக் கேட்டு, எங்கள் உற்றார் உறவினரின் பாவங்களுக்காக இதோ அழுகிறோம். எங்களுக்கு மன்னிப்பையும், ஆறுதலையும் தந்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
8 ம் நிலை இறுதியில்
புண்ணிய பெண்மணிகள் புலம்பி அழும் வேளை
தேற்றுதல் கூறி நீரும் நேசக்கண்ணீர் சொரிந்து எங்கே போறீர்.
9 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
சிந்தனை: என் இரட்சகர் விழுந்து எழுவது என் முன்மாதிரிகைக்காக, பலவீனப் பாவியான நான் மரணம் வரை நல்ல கிறிஸ்தவனாய் சீவிக்க வேண்டாமா? ஆண்டவனைப் போல் உடனுக்குடன் எழுவேனாக. (மௌனம்)
செபம் : முற்றிலும் அன்பிற்குரிய இயேசுவே! திருச்சபையின் பலவீன மக்களாகிய நாங்கள் வரப்போகும் சோதனைகளிலும், கலாபனைகளிலும் பலமாய் எழுந்து நிற்க உமது பேராயுதங்களான ஆழமான விசுவாசத்தையும், அசையாத தேவசிநேகத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
9 ம் நிலை இறுதியில்
தூரவழி சிலுவை தாங்கப் பெலமுமின்றி
மூன்றாம்முறை தரையில் முகம் படிந்தெழுந்தும் எங்கே போறீர்
10 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
சிந்தனை: தன்னையே தரவந்த இரட்சகருக்கு உலகம் காட்டும் பதில் நன்றி என்ன? அவரது ஆடையை முதலாய்ப் பறித்தெடுத்துக் கொள்கிறது. அவமான நிர்வாணமாய் அவரை மரிக்கச் செய்கிறது. நான் மட்டும் பதில் நேசமும் பதில் நன்றியும் கிடைக்காத போது என் மனம் வருந்தி, கோபம் கொள்கிறேனா? (மௌனம்)
செபம் : மரணம் மட்டும் கீழ்ப்படிந்த இயேசுவே துயில் உரியப்பட்டு அவமானமாய் நீர் நிறுத்தப்பட்டதை தியானிக்கிற நாங்கள், எங்கள் சீவியத்தில் பதில் நேசமும் பதில் நன்றியும் பெறாது வருந்தும் நேரங்களில் உமது பாடுகளின் இரகசியத்தை எங்களுக்கு கற்றுத் தாரும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
10 ம் நிலை இறுதியில்
நீட்டாடை கழற்றவே கோடிக்காயங்களாலே
இரத்தமாறாய்ப் பெருகி வேதனையால் வருந்தி எங்கே போறீர்
11 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசுவைச் சிலுவையில் அறைகின்றார்கள்
சிந்தனை: கள்ளர்களில் ஒருவனாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இரட்சகரைப் பார். என்னை இரட்சிக்க மூன்று ஆணிகளுக்குள்ளே ஒடுக்கப்பட்டிருக்கிறார். நான் இரட்சணியம் அடைய வேண்டுமானால் என் சீவியத்தில் கட்டுப்பாடுகள், ஒழுக்கங்கள், கடவுளின் கற்பனைகள், திருச்சபை ஆயர்களின் கட்டளைகள் அவசியம். இவைகளை மறந்து மனம்போல் சீவிக்கும் கிறிஸ்தவனா நான்? (மௌனம்)
செபம் : மூன்று ஆணிகளின் நடுவே முடங்கிக் கிடக்கும் திவ்விய இயேசுவே! பலவீனப் பாவிகளாகிய எங்கள் சீவியத்தில் ஒழுங்கும், ஒழுக்கமும், கற்பனையும், கட்டுப்பாடும் வளரச் செய்தருளும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
11 ம் நிலை இறுதியில்
நீட்டிய கைகால்களில் நீண்ட இரும்பாணிகள்
நிஷ்டூரமாய் அறைய நேசத்தினாலே வெந்து பலியானீர்.
12 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்
சிந்தனை: பாவங்களுக்காகப் பலியாகத் தொங்கும் இரட்சகரைப் பார். பிறரைச் சாகாமல் காத்தவர். தன்னை ஏன் சாவிற்குக் கையளித்தார்! எல்லாம் எனக்காக. என் பாவங்களுக்காக. என் எண்ணற்ற துரோகங்களுக்காக. இத்தகைய நல்ல இயேசுவுக்காக என் உயிரை கொடுக்க வேண்டிவந்தால் அதை என் பாக்கியமாக வரவேற்பேனா? (மௌனம்)
செபம் : எனக்காக உயிர்விட்ட என் அருமை இயேசுவே! என்றைக்காவது ஒருநாள் சாகவேண்டியவன் நான். உம் அன்பிற்காக ஒரு வேத சாட்சியாக மரிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்காவிட்டாலும், எல்லாக் காரியங்களிலும் என்னை அடக்கி கற்பும், கீழ்படிதலும் உள்ளவனா (ளா)ய் மரணம் வரை சீவிக்க அருள்தாரும் சுவாமி.
முதல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள் பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
12 ம் நிலை இறுதியில்
சிலுவைப் பீடமேறி மும்மணி நேரம் தொங்கி
நேய பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து பலியானீர்
14 ம் நிலை
முதல் : திவ்விய இயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
சிந்தனை: புதிய சீவியமுள்ளவர்களாய் நாம் இருக்கும் பொருட்டு, கிறிஸ்துநாதரோடு கூட நாமும் அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றோம் என்கிறார் புனித சின்னப்பர். உயிர்ப்பின் ஒளிவீசும் நல்ல சீவியமாக என் கிறிஸ்தவ வாழ்க்கை அமைய வேண்டுமானால் என் துர்க்குணங்களையும், கெட்ட பழக்கங்களையும் நான் அடக்கம் செய்ய வேண்டும். நான் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும். நான் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய துர்க்குணங்கள் எவை? (மௌனம்)
செபம் : நேசமிகுந்த இயேசுவே உயிர்ப்புக்கு ஆயத்தமாய் உமது சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது போல நல்ல சீவியத்துக்கு ஆயத்தமாய் எங்கள் துர்க்குணங்களையும், ஆசாபாசங்களையும் அடக்கம் செய்ய வேண்டும் என்கிற ஆசையை எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
எல் : எங்கள் பேரில் ....
எல் : எங்கள்பேரில் ....
முதல் : மரித்த ....
எல் : ஆமென்.
14 ம் நிலை இறுதியில்
கர்த்தனே உன் உடலை கல்லறைக்குள் அடக்க
உத்தானம் ஜீவனுமாய் உயிருடன் எழுந்து காட்சி தந்தீர்.
13 ம்நிலை
முதல் : திவ்வியஇயேசுவே .....
எல் : ஏனென்றால்.....
மரித்த இயேசுவை அவருடைய தாயாரின் மடியில் வளர்த்துகிறார்கள்
சிந்தனை: இதோ துயரங்களின் தாய்! மடிமேல் கிடக்கும் மகனைப்பார்க்கிறார்கள். வேதனையால் திறந்த வாய், சோகத்தால் மூடிய கண்கள், ஈட்டியால் திறக்கப்பட்டவிலா, ஆணிகளால் துளைக்கப்பட்ட கை கால்கள், சாட்டையால் அடிக்கப்பட்ட சரீரம், வியாகுலத்தாய் என்னை நோக்கிக் கேட்கிறாள். "ஒரு பாவமும் செய்யாத என் மகன் உனக்காக மரித்திருக்க பல பாவங்களைச் செய்த நீ மனஸ்தாபப்பட்டு மனக்கலங்காமல் ஏன் சொகுசாக வாழ விரும்புகிறாய்" (மௌனம்)
செபம் : எங்களுக்காக மரணமானஇயேசுவே! உமது திருத்தாயாரின் வியாகுலம் எங்கள் ஆத்துமங்களையும் குத்தித்திறப்பதாக. அவளது இரக்கமுள்ள மன்றாட்டால் நாங்கள் மனந்திரும்பி உத்தம கிறிஸ்தவர்களாய் வாழ வரந்தாரும் சுவாமி.
முதல் : எங்கள்பேரில் ....
எல் : எங்கள்பேரில் ....
முதல் :மரித்த ....
எல் : ஆமென்.
13 ம்நிலைஇறுதியில்
உமது மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழுசோக வாட்களால் ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்.
6
பக்தி முயற்சிகள்
1 . ஒரு சிறு அறையுண்ட சுரூபத்தைப் படுகிற இடத்தில் வைத்து, சயனிக்கும்போதும், கண் விழிக்கும்போதும் அதைப் பக்தியோடு முத்தி செய்து கொள்வது.
2 . சிலுவையைக் காணும்போதெல்லாம் அதற்கு ஆசாரம் செய்வது.
3 . இயன்ற மட்டும் இடைக்கிடை சிலுவைப்பாதை முயற்சியைச் செய்வது.
4 . கூடியமட்டும் அடிக்கடி பூசையில் பங்கு கொண்டு திருப்பாடுகளைத் தியானித்துக் கொள்வது.
5 . வெள்ளிக்கிழமைகளில் யாதேனும் ஒறுத்தல், தபசு செய்வது.
6 . திருப்பாடுகளின் நாட்களில் சிறந்த பக்தி முயற்சிகளோடு அனுசரிப்பது.