மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன்
(பழைய மாணவன் - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
Software Engineer - Maadya Digital (pvt) Ltd.)
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள் 19.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் றெஜிஸ் செல்வநாதன் (ஓய்வு பெற்ற பதிவேட்டுக் காப்பாளர்- வலயக் கல்வித் திணைக்களம், வவுனியா), மரிய றீற்றா (லீலா) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
திரு.திருமதி பாக்கியநாதர், மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றபாயேல் தொம்சனின் (Golden Star Beach Hotel - Negombo) ஆருயிர் சகோதரனும், றொஷாலியாவின் (Golden Star Beach Hotel - Negombo) பிரிய மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 24.08.2016 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் 118/1/1 கடற்கரை வீதி நீர்கொழும்பிலுள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து இறுதி அஞ்சலிக்காக கடற்கரை வீதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு கடற்கரைத்தெருவிலுள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
24.08.2016 புதன்கிழமை அன்று நீர்கொழும்பில் நடைபெற்ற செல்வன் மெறில் கிளின்டனின்
இறுதி நிகழ்வு