Daily Readings from the Holy Bible
விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவஞ்சலி.
அமரர் மரியா கொறற்றா இராயப்பு(மணி)
மண்ணில்
09.10.1961
விண்ணில்
06.07.2013
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாகொறற்றா இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 05-07-2014 சனிக்கிழமை அன்று Our Lady Of The Airways Church, 7407 Darcel Ave, Mississauga, On L4T 2x5, Canada என்னும் முகவரியில் பி.ப 02:30 மணியளவில் நடைபெறும் மேலும் உயரம்புலம் ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி ஆலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோறன்ஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16477014833
ஸ்ரனிஸ்(வட்டான்) — கனடா
தொலைபேசி: +14166405443
யோண்சன் — கனடா
செல்லிடப்பேசி: +19053036501
யோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16474057325 Posted on 4th July 2014
"மரணத்தை வென்று எம்முள் வாழும் எம் உயிரே "
தள்ளாடும் வயதினில் உன்னை இழந்து உனது பெற்றோர் துடித்திட
உனது கணவர் உன்னை தினம், தினம் தேடிட
உனது மகன் கனவிலும், நினைவிலும் அம்மா, அம்மா! என்று கூப்பிட
உனது சகோதரர் உன்னால் கண்ணீர் வடித்திட
உனது உறவுகள் உன்னை எண்ணி கூடிட
எங்கு சென்றாய் எமது காவல் தெய்வமே!
இறைவனிடம் பிறப்பு எப்படி என்று கேட்டேன்
பிறந்து பார் என்றான்
வாழ்க்கை எப்படி என்று கேட்டேன்
வாழ்ந்து பார் என்றான்
இறப்பு எப்படி என்று கேட்டேன்
உனது சகோதரியை இழந்து பார் என்றான்
உன்னையிழந்து நாதியற்று நின்ற வேளை தான்
நாம் யார் என்று புரிந்து கொண்டோம்
உன்னையல்லால் எம்மை சுகம் விசாரிக்க
யாரும் இல்லை அக்கா!
நீ வளர்த்தெடுத்த பிள்ளைகள் நாங்கள்
நாங்கள் ஒரு இலட்சியத்தோடு வாழ்கிறோம் ஆகவே தான்
நாங்கள் இன்று நாங்களாக வாழ்கிறோம்
விடிந்தது பாதி விடியாதது பாதி
உன்னை தேடி அலைகிறோம் அக்கா
எமது வாழ்விற்காய் நீ வாழ்ந்தாய் உனக்காக நாம்
வாழும் வேளை எங்கு சென்றாய் உயிரே
உன்னை இழந்து அனாதைகள் ஆனோம் அம்மா
இத்தரணியில் உம் போல் யாரம்மா எம்மை அன்பு செய்ய!!
இவ்வுலக வாழ்வில் அர்த்தம் எதுவுமில்லை
உனது இழப்பின் மூலம் வாழ்க்கையை புரிந்து கொண்டோம்
உனது இழப்பு எம்மை பலவினப்படுத்தினாலும்
நீ எம்மில் காட்டிய அன்பும், அரவணைப்பும் உனது
கள்ளமில்லா உள்ளமும், புன்சிரிப்பும் இவ் பொய்யான
வாழ்வுக்கு நம்பிக்கையும், பலத்தையும் தந்து கொண்டே இருக்கும்
எமது உயிரோடு கலந்து வாழும் உயிர் துடிப்பே
எமக்கு அற்புதங்களும் காட்சிகளும் தரும் இறைவனின் கொடையே
உன்னையிழந்து ஓராண்டு போனது ஆனால் ஒரு வினாடி
போனது போல் துடிக்கிறோம் துவள்கிறோம்!!
பொழுதுகள் விடியாமல் போனதில்லை
பிறந்தவர் இறக்காமல் போவதில்லை
இறைவனின் மாட்சியில் வீற்றிருக்கும் தாயே!
காத்திரு உனது கையை பற்றிக்கொள்ளும் நாள் தூரமில்லை!!