Daily Readings from the Holy Bible
மரண அறிவித்தல்
குருசுப்பிள்ளை ஜஸ்ரின் சிங்கராயர்
முன்னாள் புனித வளன் கத்தோலிக்க அச்சகப் பணியாளர்
மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட குருசுப்பிள்ளை யஸ்ரின் சிங்கராயர் நேற்று (10.01.2013) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குருசுப்பிள்ளை- அக்கினேசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பிலோமினாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ஜானி கனோஜி மற்றும் ஸாணஸ் நௌறோஜி (19ம் அணி, யாழ். விவசாய பீடம், ஆசிரியர்- சென்.ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும். காலஞ்சென்ற சேவியர்- ஜேட்றூட் தம்பதிகரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அருள்நாயகியின் அன்பு சகோதரனும். கார்மேல், வின்சன் டீ போல் (சிறைக்கூட அதிகாரி), மேரி றோஸ், பெத்தோல்டா, மேரி பிறிஜிற் (ஆசிரியை), பொமிக்கோ (நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும். காலஞ்சென்ற அன்ரனி ஜோன் (ஆசிரியர்) மற்றும் மேரி பற்றிமா (மலேசியா) லொயலா மகேந்திரன் (மேக்கன்டைல் பாதுகாப்பு சேவை), டோமினிக் டக்கிளஸ், றுபினா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (12.01.2013) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 12.00 மணியளவில் புனித. சம்பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர். புனித பேதுருவானவர் சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர். 077 9334937
3ம் வட்டாரம்,
விண்ணில்
10.01.2013
மண்ணில்
14.04.1950